கந்த சஷ்டியை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பால சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


 




 


கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 11.30 மணிக்கு கந்த சஷ்டி அபிஷேகம் நடைபெற்றது.


 




 


நிகழ்ச்சியை முன்னிட்டு பாலசுப்ரமணியசுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


 




 


அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி அபிஷேகம் மற்றும் அலங்காரத்தைக் காண ஏராளமான ஆன்மீக பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.