கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. 

Continues below advertisement

கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவினை முன்னிட்டு இன்று மட்டையடி திருவிழா நடைபெற்றது.  ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் ஆருத்ர தரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ர தரிசன விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Continues below advertisement



இதனைத் தொடர்ந்து இன்று மதியம் கோயில் வளாகத்தில், முன்பு அமைக்கப்பட்ட மேடையில்  மட்டையடி திருவிழா நடைபெற்றது. பசுபதீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து மட்டையடி விழா நடைபெற்றது. வாழை மட்டையை கொண்டு, பக்தர்களை அடிக்கும் விழாவாக இது நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் சிவாச்சாரியாரிடம் மட்டையடி பெற்றனர். முன்னதாக நடராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. ஓதுவார் தண்டபாணி புராண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார் 



இந்த மட்டையடியை பெற்ற பக்தர்கள் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் பெறும், வாழ்வில் செல்வம் பெருகும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நினைவில் வைத்துக் கொண்டு சுவாமியிடம் வாழை மட்டை அடி வாங்கிக் கொண்டால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். பின்னர், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர. பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்த சமய அறநிலைக் துறையினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

 

 


மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஆகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது நடராஜருக்கு, பால்,தயிர்,இளநீர், மஞ்சள்,பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 

 


அதனை தொடர்ந்து நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி,நட்சத்திர ஆரத்தி, மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola