கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.


 




 


ஆண்டிற்கு ஒரு முறை ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடஹரா சதுர்த்தி விழா மிகவும் பிரதிஷ்டை பெற்றதாகும். கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சதுர்த்தி விழாவை முன்னிட்டு  சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கற்பக விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 



தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு தங்க கவச அலங்காரம்.


 




 


கரூர் நகரப் பகுதியான தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் மற்றும் உற்சவர் கணபதிக்கு மகா சங்கடகரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , பன்னீர் , விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




உற்சவர் மற்றும் மூலவர் கணபதிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு மூலவர் கணபதிக்கு தங்க கவச அலங்காரம் சாத்தப்பட்டது. உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சங்கடகரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.