புரட்டாசி அமாவாசை; குபேரசக்தி விநாயகர் ஆலய ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு எணணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.

Continues below advertisement

கரூர் எல் ஜி பி நகர் குபேரசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

Continues below advertisement

 

 


புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு

 


 

எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 

 


அதன் தொடர்ச்சியாக ஆஞ்சநேயருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வெற்றிலை மற்றும் வடையால் அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 


 

கரூர் எல் ஜி பி நகர் குபேரசக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து  சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola