கரூர்: புரட்டாசி மாத கிருத்திகை - விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்!

ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

Continues below advertisement

கரூர் எல் ஜி பி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பொருட்களா அபிஷேகம் மற்றும் ஆராதனை.

Continues below advertisement

 

 


புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகபெடி,  அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


 

அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல் ஜி பி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத கிருத்தி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

 

 


கரூர் தான்தோன்றி மலை அசோக் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.

 


புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் தான்தோன்றி மலை அசோக் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 



அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அசோக் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத கிருத்திகை அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola