கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


 




ஆடி கிருத்திகை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் தங்க கவச உடையை அணிவித்து தொடர்ச்சியாக பல்வேறு வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறினார். அதைத்தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 




ஆடி கிருத்திகை முன்னிட்டு எல் ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அழகன் பாலமுருகர்.


 




ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீட்டிற்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, அரிசி மாவு, கரும்பு பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு  அபிஷேகம் நடைபெற்று


 




அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகை பாலமுருகன் அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.