கரூரில் பெருமாள் சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கையாக வழங்க ஊர்வலமாக எடுத்து வந்த மக்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமை சுவாமி பாதத்தில் வைத்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர்.
தாந்தோணிமலையை சுற்றி ஊர்வலமாக சென்ற அவர்கள் தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களைச் சுற்றிவிட்டு, புரட்டாசி கடைசி சனிக்கிழமை கரூர் மாநகரப் பகுதி வழியாக ஒத்த செருப்பை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த வினோத நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.