ஆனி மாத பிரதோஷம்: வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நந்தி பகவான்!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Continues below advertisement

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Continues below advertisement

 


 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு  மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் எண்ணைக்காப்பு சாற்றி,  பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சல், மஞ்சள், சந்தனம் ,அபிஷேக படி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 

 


தொடர்ந்து நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன்,நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டினார். தொடர்ந்து சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

 


அதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷிவ வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க திருவீதி உலா காட்சி அளித்தார் நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர்  சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வெள்ளி ரிஷிப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் படி செய்தனர் அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா கோசத்துடன் வெள்ளி ரிஷிப வாகனத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

 



கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத பிரதோஷ விழாவை காண கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கல்யாண பசுபதீஸ்வரர் மற்றும் நந்தி பகவானை மனமுருகி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் ஆலயம் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் ஆன்மீக பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola