கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச உடையில் நந்தி பகவான் காட்சியளித்தார்.


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டி தொடர்ச்சியாக நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோடசர உபச்சாரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.


 


 




தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.