அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை முன்னிட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


கரூர் மாவட்டம், தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் அருகே குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை முன்னிட்டு அழகன் முருகனுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




 


அதைத் தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, கையில் வேலுடன் வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அழகன் பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜை.


கரூர், அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




 


அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


ஆலயத்தின் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




கிருஷ்ணாயபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத கிருத்திகை பூஜை.


கரூர் மாவட்டம், அருள்மிகு ஸ்ரீ தண்டாயுத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத கீர்த்தியை முன்னிட்டு மூலவர் தண்டாயுத சுவாமிக்கும் உற்சவர் முருகப் பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், விபூதி, அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் மூலவர் தண்டாயுதபாணி உற்சவர் முருகப்பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.


அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.