கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


 


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை காலபைரவருக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வடை மாலை சாற்றிய பிறகு காலபைரவருக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினர். அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியும் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை காண கரூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.


 


 




 


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ஸ்ரீ சௌந்தரநாயகி உடலுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க  பஞ்சமூர்த்தி திருவீதி உலா சிறப்பாக தொடங்கியது.


 


 




 


நிகழ்ச்சியை முன்னிட்டு வெள்ளி எலி வாகனத்தில் விநாயகர் திருவீதி உலாவும், அதன் தொடர்ச்சியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் சௌந்தரநாயகிவுடனும், அதன் தொடர்ச்சியாக அலங்காரவல்லி தனி வாகனத்திலும், அதன் தொடர்ச்சியாக சண்டிகேஸ்வரர் தனியாகவும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தேங்காய், பாழம் பிரசாதத்துடன் சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.  இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.