கரூர் ஐந்து ரோடு அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு கந்த சஷ்டி கவச சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




கந்தசஷ்டி முன்னிட்டு கரூரில் பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐந்து ரோடு ஆஞ்சநேயர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னிரு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .


 


 




 


அதை தொடர்ந்து அழகன் தண்டாயுதபாணி சாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். மேலும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 




 


கரூர் ஐந்து ரோடு அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு கந்த சஷ்டி கவச சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.