காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோயிலில் கருட சேவை உற்சவம், பச்சை பட்டு உடுத்தி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வைகுண்ட பெருமாள்.


வைகுண்ட பெருமாள் திருக்கோயில்


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


 




வைகாசி மாத பிரம்மோற்சவ கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள செய்தனர்.




கருட சேவை


பின்னர் கருட வாகனத்தில் காட்சியளித்த வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க காஞ்சி நகரின் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்தார். வைகாசி மாத பிரம்மோற்சவ கருட சேவை உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.




 


முக்கிய உற்சவங்கள் நடைபெறும் நாட்கள் 
 


ஜூன் நான்காம் தேதி-  நான்காவது நாள் உற்சவம் சேஷ வாகனம்.  மாலை வேளையில்  சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.


ஜூன் 5-ம் தேதி- ஐந்தாவது நாள் சாலை உற்சவம்  நாச்சியார் திருக்கோளத்தில் பல்லாக்கு உற்சவம்,  தொடர்ந்து மாலை யாளி  வாகன உற்சவம் நடைபெற உள்ளது.




ஜூன் 6ஆம் தேதி -ஆறாவது நாள் உற்சவம்  வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.  மாலை வேளையில்  யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.


தொடர்ந்து ஏழாவது நாள் -ஜூன் ஏழாம் தேதி  எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது.  விழாவின் மிக முக்கிய உச்சகங்களில் ஒன்றாக எடுப்பு தேர் விழா பார்க்கப்படுகிறது.


 




ஜூன் 8 ஆம் தேதி எட்டாவது நாள் உற்சவம்  - வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்


ஜூன் 9 ஆம் தேதி - ஒன்பதாவது நாள் உற்சவம்  பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது  மாலை  முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது