சித்திரை திருவிழாவின் சிகரணிகள்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக நடைபெறுகிறது.

 


டம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 

சித்திரைத் திருவிழா

 


மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2024 - கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவிழா கொண்டாட்டம்



 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20 ஆம் திக்குவிஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. மேலும் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மாசி வீதிகளில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள், இந்நிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19 முதல் 28 வரை நடைபெறுகிறது.

 

சிகர நிகழ்ச்சி

 

சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக நடைபெறுகிறது. தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு அழகர் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டபப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிகாலை தல்லாகுளத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சு விழா நடைபெறுகிறது, ஏப்ரல் 24 ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்வும் நடைபெறுகிறது. ஏப்ரல் 25ஆம் தேதி தல்லாகுளத்தில் பூப்பல்லத்தில் எழுந்தருளும் கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார், வழி நடுகலமுள்ள மண்டபோடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு வந்தடைகிறார்.