புனித சனி, ஈஸ்டர் ஈவ் அல்லது கருப்பு சனி என்றும் அழைக்கப்படும் இந்த ஈஸ்டருக்கு முந்தைய சனிக்கிழமை, புனித வாரத்தின் கடைசி நாளாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்துவின் உடல் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் கல்லறையில் வைக்கப்பட்ட நாள் இன்று. ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழுந்த அவர் ஒரு முழு நாள் மரணித்து கல்லறையில் இருந்த நாளான இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க தினமாக அனுசரிக்கிறார்கள். இந்த நாளில், கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து, பைபிளில் இருந்து வாசகங்களை படித்து, ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இது புதிய தொடக்கங்களின் நம்பிக்கையையும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது.


வரலாறு


புனித சனிக்கிழமையின் வரலாறு ஆரம்பகால கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தையது. துக்க நாளாக அனுசரிக்கப்பட்ட இந்த தினத்தில் இயேசு கிறிஸ்துவின் உடல் கல்லறையில் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நாள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கான எதிர்பார்ப்பு நேரமாகவும் கருதப்பட்டது. இந்த புனித சனி, உண்ணாவிரதம் இருந்து அனுசரிக்கப்படுகிறது. மேலும் உயிர்த்தெழுதல் கொண்டாட்டத்துடன் இந்த நாள் முடிவடைகிறது. 



முக்கியத்துவம்


இது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கான தொடக்கமாக கருதப்படுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, புனித சனிக்கிழமையன்று இயேசுவின் உடல் கல்லறையில் இருந்ததாகவும், அவரைப் பின்பற்றும் பல மக்கள் கேட்பார் இன்றி, துயரத்திலும் குழப்பத்திலும் இருந்தனர். புனித சனிக்கிழமையன்று இரவு நடைபெறும் ஈஸ்டர் தினம், புதிய வாழ்வின் நம்பிக்கையையும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் இரட்சிப்பின் வாக்குறுதியைக் கொண்டாட கிறிஸ்தவர்கள் இந்த நாளில் கூடுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்: கடந்த ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என புகார்.. ஈபிஎஸ்ஸை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி..!


துக்க அனுசரிப்புகள்


கிறிஸ்தவர்களில் உள்ள உட்பிரிவுகளை சார்ந்த பல மக்கள் புனித சனிக்கிழமையை வெவ்வேறு வழிகளில் அனுசரிக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையில், புனித சனிக்கிழமை துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஈஸ்டர் விழிப்பு விழா தொடங்கும் வரை பலிபீடம் வெறுமையாக இருக்கும். ஆனால் பல புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில், புனித சனிக்கிழமை ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது.  ஆண்டின் மிக முக்கியமான சடங்கான ஈஸ்டர் தினக் கொண்டாட்டம் புனித சனிக்கிழமையன்று இரவு நடத்தப்படுகிறது. இந்த பிராத்தனைகள் உயிர்த்தெழுதலின் கொண்டாட்டத்தில் முடிவடைகிறது.



 


முக்கியத் தகவல்கள்


துக்கத்தை வெளிப்படுத்துவதால் புனித சனிக்கிழமை கருப்பு சனிக்கிழமை என்றும் அழைக்கப்படுகிறது. சில தேவாலயங்களில், புனித சனிக்கிழமை கிரேட் சப்பாத் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்கிறது. ஈஸ்டர் விஜில் முதலில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் நடத்தப்பட்டது, ஆனால் பின்னர் அது யூத சப்பாத்துடன் ஒத்துப்போவதற்காக சனிக்கிழமை மாலைக்கு மாற்றப்பட்டது.