கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நவகிரகங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சனிக்கிழமை இரவு 11.18 மணியளவில் மீன ராசியில் இருந்து குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அதனை ஒட்டி பல்வேறு நவகிரக ஆலயங்களில் காலை முதலே சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.


குருபெயர்ச்சி:


இதன் ஒரு பகுதியாக தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தின் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரகங்களுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, அபிஷேக பொடி விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து குரு பகவான் உள்ளிட்ட நவக்கிரங்களுக்கு பட்டாடை உடுத்தி , வண்ண மாலைகள் அனுபவித்த பிறகு, குரு பகவானுக்கு பிடித்தமான சுண்டல் மாலை அணிவிக்கப்பட்டது. வெள்ளி கவசத்தில் குரு பகவான் காட்சியளிக்க அது தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் குரு பகவானுக்கு நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டினர். அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


சிறப்பு அபிஷேகம்:


குரு பெயர்ச்சியை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவக்கிரங்களுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் , எலுமிச்சைசாறு , திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் பிரத்தேகமாக யாகசாலை அமைத்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித கலச தீர்த்தத்தாலும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து குரு பகவானுக்கு வெள்ளி காப்பு சாற்றி, சுண்டல் மாலை அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.