நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளது.


Vinayagar Chaturthi 2022 LIVE: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்வு - குவிந்த பக்தர்கள்..!




இதற்காக விநாயகர் சிலைகள்  தேனி பொம்மையகவுண்டன்பட்டியில், கோம்பை பகுதிகளில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட பகுதிகளிலிருந்து சிலைகள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து வர்ணம் பூசி தயார் நிலையில் இருந்த சிலைகளை நேற்று மாவட்டம் முழுவதும் இருந்து வந்த விழாக்குழுவினர் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். சிலைகளை எடுத்துச் செல்லும் முன்பு அவை செய்யப்பட்ட இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.


தேனி மாவட்டம் முழுவதும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட 780 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் தடைவிதித்தனர். அவ்வாறு சிலைகள் வைக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒவ்வொரு சிலைகளுக்கும் தலா 4 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு போலீசார் வீதம் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Cobra Review: படம் எடுத்ததா? படுத்ததா? விக்ரமின் கோப்ரா படம் எப்படி இருக்கு..? - திரைவிமர்சனம்!




ரோந்து வாகனங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள் இன்று காலை பிரதிஷ்டை செய்து, கண் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியிலும்  சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.


பல தார திருமணம்.. நிக்காஹ் ஹலாலா.. முஸ்லீம் தனிநபர் சட்டத்திற்கு முற்றுப்புள்ளியா? விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றம்




மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 3 நாட்கள் நடக்கிறது. பெரியகுளத்தில் இன்று ஊர்வலம் நடக்கிறது. தேனி, போடி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் நாளை  வியாழக்கிழமை ஊர்வலம் நடக்கிறது. சின்னமனூரில் வருகிற 2ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. மற்றும் சிலைகள் ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண