Just In

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயிலில் வைகாசி பெருவிழா: பதுமை பூ போடும் நிகழ்ச்சி! பக்தர்கள் பரவசம்

தமிழகத்தில் எங்கும் காணப்படாத வினோத திருவிழா.. 3 லட்சம் தேங்காயை இடி, இடிப்பது போல உடைத்த பக்தர்கள் !

பக்தர்களே.. நாளை வைகாசி பெளர்ணமி! வீட்டில் பணக்கஷ்டம் தீர இதை மட்டும் செய்யுங்க..

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம்

தஞ்சாவூரில் 35 அடி உயர அரிவாள்: பிரமிப்பில் மக்கள்! தேரோட்டமும் தயார்!
தீயில் விழுந்த பெண்! சாதுர்யமாக காப்பாற்றிய பக்தர்கள் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
முஸ்லிம் சிறுவனின் கிறிஸ்துமஸ் வாழ்த்து - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
திருப்பத்தூரில் கிறிஸ்துமஸ் விழா கோலகாலமாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
Continues below advertisement

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய முஸ்லீம் சிறுவன்
திருப்பத்தூரில் சிறுவர்களுக்கு முஸ்லிம் சிறுவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஏசுநாதரின் பிறந்தநாளை ஆண்டும் தோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள சகாய மாதா ஆலயத்தில் ஏசு நாதரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஏழை, எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உலக அமைதி வேண்டியும், அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டியும் 3000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனை செய்தனர்.
திருப்பத்தூர் சுற்றியுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கேரல் வாகனங்களில் வந்த கிறிஸ்த்துவ சிறுவர்களுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement