வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.  கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழாவை முன்னிட்டு தகட்டூர் பைரவ நாத சுவாமி ஆலயத்திலிருந்து கப்பரை எடுத்து  சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வந்து மாப்பிள்ளை வீரன்கோவிலை  வந்துசேர்ந்தது.



 

பின்பு பக்தர்கள் மீதுவாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான  பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து எடுத்து சென்றனர்.  வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி உருவ பொம்மைகளை அங்கு வைத்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பின்பு இரவு சுவாமி வீதி உலா காட்சியும் தேரோட்டம் நடைபெற்றது.



 

இதன் பின்னர் ஆலய வளாகத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக் கணக்கான உருவபொம்மைகளை  வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாப்பிள்ளை திருமேனி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண