தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் பிச்சாண்டவர் திருவீதி உலாவை முன்னிட்டு பிச்சாண்டவர்க்கு ஆலய மண்டபத்தில் என்னைக் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, அபிஷேக பொடி, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிச்சாண்டவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேல தாளங்கள் முழங்க பிச்சாண்டவர் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.




 


ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. மார்கழி மாத பிச்சாண்டவர் திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் உற்சவர் நடராஜர், விநாயகர், பாலமுருகன், அம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். 


 




அதைத் தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் சுவாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு அன்னத்தால் அபிஷேகமும், பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அளித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற நடராஜர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


காளியம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை


தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சி நாக நோட்ட காரம்பட்டி பருவமழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்து இருத்தல், வேண்டி காளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தோகைமலை அருகே திருவாதிரை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சார்பாக மகா காளியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இத்திருவிளக்கு பூஜை ஆனது விழா குழுவினர்களின் ஏற்பாட்டின் படி அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு விழா குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர். அன்று முதல் இப்பகுதி பொதுமக்கள் எட்டு நாட்கள் விரதம் இருந்து வந்தனர். இதனை அடுத்து நேற்று திருவிளக்கு பூஜை தொடங்கியது.


இதில் பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்து முக பித்தளை குத்துவிளக்குகளை கொண்டு வந்திருந்தனர் பூஜை பொருட்கள் அனைத்தும் விழா குழுவினர்களால் வழங்கப்பட்டு பூஜையை நடத்தினார். இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக 108 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில் கல்வியில், சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை மாங்கல்யம் நீடித்திருத்தல், என வரம் கேட்டு குங்குமம் துளசி மலர் மஞ்சள் தானியம் போன்ற பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து, ஐம்பொருள் அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பூஜையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.