கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் கோகுல அஷ்டமி முன்னிட்டு மூலவர் பண்டரிநாதன் மற்றும் ரகுமாய் தாயார் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


 




 


கரூர் பண்டரிநாதன் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் , ரகுமாய் தாயார் ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சுவாமிகளுக்கும், பரிவார சுவாமிகளுக்கும் எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் பண்டரிநாதன், ரகுமாரி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு மகா தீபாராதனை  நடைபெற்றது. கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற கோகுலாஷ்டமி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சுவாமி திருவீதி உலா.


 




 


மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி மற்றும் கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து தங்க ஆபரணங்கள் அணிவித்த பிறகு மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமிகளின் திருவீதி உலா புறப்பட்டு ஆலயத்தில் இருந்து முக்கிய வீதியில் வழியாக வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.


 




 


அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கிருஷ்ணர் சுவாமி திருவிதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.