ஆடி அமாவாசை; கரூரில் பல்வேறு ஆலய அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு  ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

கரூர் டி செல்லாண்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Continues below advertisement

 


ஆடி அமாவாசையை முன்னிட்டு  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மூலவர் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பகவதி அம்மனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தி உடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 


ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு  ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

 



கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

 

 

 


ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறுஸ்ரீ ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று இரவு முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய் இளநீர் எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,குங்குமம் , விபூதி ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

 


கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அம்மாவாசை சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola