Jasprit Bumrah : ‘குட்டி மகனை வரவேற்கிறோம்..’ தந்தையான சந்தோஷத்தில் மும்பைக்கு பறந்த பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய சஞ்சனா கணேசன் என்பவரை, காதலித்து கடந்த 2021ம் ஆண்டு பும்ரா திருமணம் செய்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. நாங்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன! இந்த காலை வேளையில், நாங்கள் எங்குள் குட்டி மகனான அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் வரும் நிகழ்வுகளுக்காக ஆவலாக உள்ளோம்.” என பும்ரா குறிப்பிட்டுள்ளார்.
காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா, அண்மையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
இந்நிலையில், தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற நேபாள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்த சூழலில், மகனை காண இலங்கையில் இருந்து பும்ரா மும்பைக்கு திரும்பியுள்ளார்.
இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால், பும்ரா மீண்டும் இலங்கை சென்று அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -