TNPL : அசத்தலான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு முன்னேறிய கோவை கிங்ஸ்!
ஸ்ரீஹர்சக்தி | 08 Jul 2023 06:08 PM (IST)
1
நேற்று டி.என்.பி.எல் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் திண்டுக்கல் அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
2
கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
3
பின்னர் வந்த பி சச்சின்,யு.முகிலேஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது கோவை கிங்ஸ்.
4
பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் தொடக்கம் முதலே தடுமாறியது. சரத்குமார் மட்டும் அணிக்காக தனி ஆளாக போராடினார்.
5
அவரின் போராட்டம் எந்த பயனும் இல்லாமல் போனது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 மட்டுமே எடுத்தது.
6
இதனால் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.