Trichy Power Outage: திருச்சி மாவட்ட மக்களுக்கான அலர்ட்! நாளை (14.10.25) முக்கிய இடங்களில் மின் தடை.. முழு விவரம்
Trichy Power Cut (14.10.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 14 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 14) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
சிறுகமணி பகுதியை சுற்றியுள்ள பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம் ஆகிய பகுதிகள்
மேலும் பெட்டவாய்த்தலை தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, பழங்காவேரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்
அலுந்தூர் ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது
முன்னெச்சரிக்கை: இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.