South TN Rains : தூத்துக்குடி மக்களுக்கு உடனுக்குடன் உதவி செய்த எம்.பி கனிமொழி!
வரலாறு காணாத கனமழையால் நிலைகுலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம், மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது
இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் மேற்கொள்ளப் பட்டுவரும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார்.
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் மேற்கொள்ளப் பட்டுவரும் மீட்பு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
எம்.பி கனிமொழியின் இந்த செயலை மக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்