Alanganallur Jallikattu : ஆட்டம் காட்டிய அலங்காநல்லூர் காளைகள்..இழுத்துப்பிடித்து போட்டியிட்ட இளைஞர்கள்!
பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்
இந்த வருடமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன
அதிலும் குறிப்பாக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம்
அலங்காநல்லூரில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல காளைகளும் பல மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்
இதில், பல காளைகள் இளைஞர்களின் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டின
காளைகளை பிடிக்க இளைஞர்கள் பெரும் முயற்சி செய்தனர்
அலங்காநல்லூர் போட்டியை கண்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் 3 பேருக்கு இன்று அடிப்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
அலங்காநல்லூர் போட்டியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் நேரில் கண்டு களித்தனர்
இதில், சூரியின் சார்பாக விடப்பட்ட புரூஸ்லி என்ற காளை வெற்றி பெற்றது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது நிறைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன
அதில் சில தற்போது வெளியாகியுள்ளது
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன