Cooking Tips : மின்னல் வேகத்தில் சமைத்து முடிக்க இந்த டிப்ஸ்களை தெரிஞ்சுகோங்க!

தோசை மாவு புளித்துவிட்டால் மாவில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே தனியாக வரும் தண்ணீரை எடுத்துவிட்டால் புளிப்புத்தன்மை நீங்கிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
முட்டை கோஸ் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

இட்லி மாவு அரைக்கும் போது இரண்டு வெண்டைக்காய், கொஞ்சம் விளக்கெண்ணை சேர்த்தால் இட்லி பூப்போல் வரும்.
தயிர்சாதத்தில் கடுகு சேர்த்து தாளிப்பதற்கு பதிலாக ஓமத்தை சேர்த்து தாளித்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.
வெண்டைக்காயை வேக வைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் வெண்டைக்காய் பச்சையாக இருக்கும்.
குலாப் ஜாமுன் செய்த பின் ஜீரா மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது தயிரில் கலந்து லசியாக குடிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -