Tips:வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமலிருக்க டிப்ஸ் இதோ!
ஜான்சி ராணி | 17 May 2024 04:01 PM (IST)
1
வெங்காயம் நறுக்கும் போது கண் எரியும், கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே வெங்காயம் நறுக்குவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது.
2
வெங்காயம் நறுக்கும் போது கண் எரியாமல் இருக்க, கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
3
ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து மிதமான அளவு சூடாக்கவும்.
4
பின் நறுக்க வேண்டிய வெங்காயத்தை இந்த தண்ணீரில் போட்டு, 30 நொடிகளுக்கு பின் எடுத்து விடவும்.
5
இப்போது வழக்கம் போல் வெங்காயத்தின் தோலை நீக்கி விட்டு, வெங்காயத்தை நறுக்கலாம். இப்போது கண் எரியாது.
6
வெங்காயத்தை சுடு தண்ணீரில் போடுவதால், அது வெந்து விடும் என்று நினைக்க வேண்டாம்.