Drowned Car Care : மிக்ஜாம் புயலில் உங்கள் கார் மூழ்கிவிட்டதா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க!

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளும் அல்லல் பட்டு விட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுள் புகுந்த வெள்ள நீர் கார்களை முழ்கடித்தும் நீரில் அடித்தும் சென்றது.

அவ்வாறு உங்கள் காரும் மழைநீரில் முழ்கி இருந்தால் முதலில் உங்கள் காரில் தேங்கிய தண்ணீரை ஒரு பாத்திரம் கொண்டு வெளியேற்றிவிடுங்கள்.
எக்காரணம் கொண்டும் உங்கள் காரின் இஞ்சினை ஆன் செய்ய வேண்டாம்.
உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்கள் காரின் பேனட்டை திறந்து இரண்டு பேட்டரி ட்ர்மினல்களையும் ஸ்பேனர் கொண்டு கழற்றிவிடுங்கள்.
உங்கள் காரின் இஞ்சின் காயும் வரை அதனை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டு பிறகு ஸ்டார்ட் செய்யுங்கள். கார் அவசியம் தேவை என்றால் அருகில் உள்ள மெக்கானிக்கை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காரை டோ செய்து இஞ்சினை ட்ரை க்ளீன் செய்த பிறகு நீங்கள் பயன்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -