வெட்டிய பழங்கள் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்வது.. இதை முதலில் படிங்க!
அனைத்து பழங்களிலும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாத்துகள் நிறைந்து இருக்கும்.
சத்துக்கள் நிறைந்த பழத்தை வெட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுப்பு நிறத்தில் மாறுவதால் நாம் அதை சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம்.
இதனை தடுக்க நாமும் பல முறை முயற்சி செய்து பார்த்திருப்போம்.
பிரெஷ்ஷாக வெட்டிய அனைத்து பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் உப்பு சேர்த்து நீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து, உப்பு தண்ணீரை எடுத்துவிட்டால் பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மேலும், பழங்களில் தேன் கலந்து 3 நிமிடங்கள் ஊற வைத்தால், பழங்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
புதிதாக வெட்டிய பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் சோடா நீரை ஊற்றி விடுங்கள். அந்த பழங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து, பின் சோடாவை வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், பழங்களை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.