Daily Routine : இந்த நேரத்திற்கு இதை செய்தாலே உடலில் பிரச்சினையே வராது!

உடலில் காலை 6 - 10 வரை கபம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால் உடல் சோர்வாகவே இருக்கும். அதனால் எழுந்து உடற்பயிற்சி செய்து, குளித்த பின் காலை உணவை சாப்பிடலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
உடலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில்தான் எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட வேண்டும். பகுத்தறிந்து செய்ய வேண்டிய செயல்களை செய்யலாம்

உடலில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் படிக்கலாம்.
உடலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபம் அதிகமாக இருக்கும். 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் 10 நிமிடங்களுக்கு வாக்கிங் போகலாம். அத்துடன் 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும்
உடலில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். உடலானது தன்னை தானே சீராக்கி கொள்ளும் நேரம் இது. இந்த வேளையில் நன்றாக தூங்க வேண்டும்.
உடலில் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். மூளை சிறப்பாக இயங்கும், எளிதாக மலம் கழிக்க முடியும், தியானமும் செய்ய முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -