Curd: வீட்டிலேயே கெட்டித்தயிர் தயாரிக்க சில டிப்ஸ் இதோ!
தயிர்(Curd) ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது, மேலும் நல்ல பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளது. அதுமட்டுமின்றி அது நல்ல தரமான புரத உணவாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App10 முதல் 15 நிமிடங்கள் வரை பாலை மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். அவ்வாறு காய்ச்சினால் தான் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.. பாலை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து அதை நன்றாக குளிர வைக்கவும்.
துவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும். பின்னர் அந்தப் பாலை இன்னொரு அகலமான பாத்திரத்தையும் கொண்டு நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.
நுரை பொங்க ஆத்துவதால் என்ன பயன் என்று கேட்டால். அதனால்தான் தயிர் நன்றாக கெட்டியாக உறையும். நுரை பொங்கிய பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.
இதை ஒரு கன்டெய்னரில் ஊற்றி உறையவிடவும். தயிர் உறை ஊற்றிய பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். அதைவிட முக்கியம் அதை அங்குமிங்கும் ஆட்டிவிடக் கூடாது. இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -