Ragi Upma : ரவையில் வேண்டாம்.. ராகியில் உப்மா செய்யுங்க சூப்பரா இருங்க!
தேவையான பொருட்கள்: ராகி மாவு - 1 கப், தண்ணீர், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் - 6 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, துருவிய தேங்காய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் சிறுக சிறுக தண்ணீர் ஊற்றி புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதன்பிறகு ராகி மாவை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்தது கடுகு, சீரகம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
அடுத்தது நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.அதன்பிறகு மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்த ராகி மாவை சேர்க்கவும்.
அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்த ராகி மாவை சேர்க்கவும்.