சளித்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த நெஞ்செலும்பு சூப்பை குடித்து பாருங்க!
தேவையான பொருட்கள் : ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, தனியா - 1 மேசைக்கரண்டி, அரைத்த மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி, பூண்டு - 6 பற்கள் தட்டியது, சின்ன வெங்காயம் - 1 கப் தட்டியது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 5 , சோம்பு - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை - 1, தக்காளி - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, கல் உப்பு - தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் - 3 கப்
செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்தது பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் உரலில் தட்டி கொள்ளவும்.
அடுத்தது பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வதக்கி கொள்ளவும்.
அதன்பின் தட்டிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், ஒரு மேசைக்கரண்டி அரைத்த மசாலா, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நெஞ்சி எலும்புடன் மசாலா கலந்த உடன் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
பிரஷர் குக்கரில் 10 விசில் வரும் வரை காத்திருக்கவும் . அதன் பிறகு குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறினால் சுவையான நெஞ்செலும்பு சூப் தயார்.