Cooking Tips : இப்படி செய்தால் பூரி உப்பலாக வரும்..வடை சூப்பராக இருக்கும்!
அனுஷ் ச | 10 May 2024 05:04 PM (IST)
1
எந்த வகை கேசரி செய்தாலும் அதில் 3 டீஸ்பூன் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
2
சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் புலி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்துவிடும்
3
இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்புடன், ஒரு கரண்டி வடித்த சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தல் சுவை அதிகரிக்கும்
4
நெய் காய்ச்சும் போது உப்பு சேர்த்து காய்ச்சினால் ரொம்பா நாள் கெடாமல் இருப்பதோடு சுவையாகவும் இருக்கும் .
5
முட்டை பொடிமாஸ் எண்ணெய் ஊற்றி செய்யாமல், வெண்ணை ஊற்றி செய்தால் அசைவ மனம் இருக்காது, அத்துடன் சுவையாகவும் இருக்கும்.
6
பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் நீண்ட நேரம் பூரி உப்பலாக இருக்கும்