Arisi Thattai : மொறு மொறுப்பான அரிசி தட்டை.. சுலபமா செய்துவிடலாம்!
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் , கடலை பருப்பு - 1/4 கப் , கறிவேப்பிலை, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , எள் - 2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பில்லாத வெண்ணெய் - 2 தேக்கரண்டி, வெந்நீர், எண்ணெய்.
செய்முறை: மசாலா அரைக்க கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, ஊறவைத்த கடலை பருப்பு சேர்க்கவும். அத்துடன் அரைத்த மசாலா உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகம், எள், பெருங்காய தூள் மற்றும் உப்பில்லாத வெண்ணெய் சேர்க்கவும்.
அடுத்தது சூடான கொதிக்கும் நீரை படிப்படியாக ஊற்றி மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு காடையில் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும். அதன் பின் ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை வாழை இலையில் தட்டி எண்ணெயில் போடவும்.
எண்ணையில் சேர்த்த தட்டையை எல்லாப்பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அரசி தட்டை தயார்.