Sambar Recipe : கமகமக்கும் அரைச்சுவிட்ட சாம்பார்.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு - 1 கப், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 300 கிராம், பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்,கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி, முழு தனியா - 2 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 12 , துருவிய தேங்காய் - 1/2 கப், நெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, முருங்கை காய், புளி தண்ணீர் - 1/2 கப், கறிவேப்பிலை, வெல்லம் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
செய்முறை : குக்கரில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
அடுத்தது ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன்பின் காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்
அடுத்தது ஆறவைத்த மசாலாவை மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் அரைத்துவிட்டு பின்பு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும். அதன்பின் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்தது அரைத்த மசாலா விழுது, புளி தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக சிறிதளவு வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான அரைத்துவிட சாம்பார் தயார்.