Cough Relief : தொடர்ச்சியாக இருமல், தும்மல் வருகிறதா? இதை செய்யுங்க!
புதினாவில் இயற்கையாகவே இருமல் மற்றும் மூக்கடைப்பை போக்கும் பண்புகள் உள்ளன. இதன் இலைகளை டீ போட்டு குடிப்பதாலோ, இதன் எசென்ஷியல் ஆயிலை வெண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து நீராவி பிடிப்பதாலோ இருமல் தும்மல் குணமாகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை வறட்சி, இருமல் ஆகியவை சரியாகலாம். உப்பு கலந்த நீர் தொண்டையில் உள்ள சளியை நீக்கவும் வழிசெய்கிறது .
இஞ்சி டீ தொண்டை சளியையும் , இருமலையும் போக்க உதவுகிறது. இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் மற்றும் புதினா இலையை சேர்த்து குடித்து வந்தால் தொண்டை வீக்கம், மூக்கடைப்பு சரியாகலாம்.
சூடான பாலில் மஞ்சள் பொடியை கலந்து குடித்து வந்தால் இருமல், சளி குணமடையலாம். வறண்ட இருமலுக்கு மஞ்சள் பால் மிகவும் நல்லது.
மூக்கடைப்பு மற்றும் தொண்டை எரிச்சலை போக்க நீராவி பிடிக்கலாம். நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து ஆவி பிடித்தால் சுவாச திறன் மேம்படலாம்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -