Cooking Tips : உங்கள் சமையலை ஆகா ஓகோன்னு எல்லோரும் புகழ்ந்து தள்ளனுமா..? அப்போ இந்த டிப்ஸை தெரிஞ்சுகோங்க!
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பால் சேர்ந்து பிசைந்தால் பூரி ருசியாகவும் இருக்கும், மென்மையாகவும் வரும்.
சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
சிக்கன், மட்டன் ரோஸ்ட் செய்யும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால் சிறிது அரிசி மாவு தூவினால் சரியாகிவிடும், கறி சுவையாகவும் மற்றும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
அதிரசத்ததை எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது இரண்டு கரண்டிகளுக்கு இடையில் வைத்து எண்ணெயை பிழிந்து எடுத்தால் அதிரசம் மென்மையாக இருக்கும்.
பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு அரிசி மாவு கலந்து செய்தால் பஜ்ஜி எண்ணெய் குடிப்பது குறையும் மொறு மொறுப்பு தன்மையும் கூடுதலாக இருக்கும்.
மோர் குழம்பு செய்யும் போது கடைசியாக தாளிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் மோர் குழம்பு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.