Rasmalai :ரசமலாய் பிடிக்குமா? எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்!

ரசமலாய்
ரஸ்மலாய் இந்திய வீடுகளில் முக்கியமாக பண்டிகைக் காலங்களிலும், பெரும்பாலும் தீபாவளி மற்றும் ஹோலியின் பண்டிகையின் போதும் தயாரிக்கப்படுகிறது.
ரசமலாய் கெட்டியான க்ரீம் பாலில் ஊற வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் கீர் போக் என்று அழைக்கப்பட்டது. பிறகு மேற்கு வங்கம் பிரிக்கப்பட்ட போது, ரசமலாய் என்று மாற்றப்பட்டது.
ரஸ் மற்றும் மலாய் என்ற இரண்டு இந்தி வார்த்தைகளுக்கு ஜூஸ் மற்றும் க்ரீம் என்று பொருள்.
ரசமலாய் ஒரு பிரபலமான இந்திய இனிப்பு ஆகும். மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற பாலாடைக்கட்டி பாலாடைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
வெள்ளை க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பனீர் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூ, உலர்ந்த பழங்களைச் சேர்க்கின்றனர்.
சமீபத்தில் உலகின் சிறந்த 25 சீஸ் இனிப்புகள் பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் (Taste Atlas) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் ரசமலாய் நான்காவது இடம் பிடித்துள்ளது