Ramya Pandian: கல்யாணமான ஒரே மாதத்தில் கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன், கடந்த மாதம், லவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில், காதலை அறிவித்த ரம்யா பாண்டியன் ஒரே மாதத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்களின் திருமணம், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் நடந்தது. இதில் ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல், லவல் தவான் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வடநாட்டில் உள்ள பெரிய குடும்பத்து மருமகளாக ரம்யா பாண்டியன் மாறினாலும் தமிழ் நாட்டு முறைப்படி தான் தாலி கட்டி கொண்டார். திருமணத்தை தொடர்ந்து பிரமாண்டமாக சென்னையிலும் ரிசெப்ஷன் ஒன்றை நடத்தி முடித்தார். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த சில வாரங்களுக்கு பின்னர், தாய்லாந்தில் கணவருடன் ஹனி மூன் கொண்டாட சென்ற ரம்யா பாண்டியன், தற்போது தன்னுடைய மாமியார் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார்.
திரையுலகில் இருந்து முழுமையாக விலகும் முடிவில் ரம்யா பாண்டியன் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன், குழந்தையோடு கொஞ்சி விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சிலர் திருமணமான ஒரே மாதத்தில் குழந்தையோடு கலக்குறீங்க என கிண்டலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.