Keerthi Suresh : கீர்த்தி சுரேஷூக்கு என்னாச்சு... திருமணத்திற்கு பின் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
குழந்தை நட்சத்திர்மாக பல படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஏ.எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழ் இந்தி , மலையாளம் , தெலுங்கு என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி இருமுறைகளிலும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நடிகர் விஜய் உட்பட தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரகு தாத்தா திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து இந்தியில் தெறி படத்தின் ரீமேக் பேபி ஜான் படத்தில் நாயகியாக நடித்தார்.
அடுத்தபடியாக ரிவால்வர் ரீட்டா , மற்றும் கன்னிவெடி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்று வந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த சுற்றுலாவின் போதான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார்
அண்மையில் மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவரது ஆடை பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் முகத்தில் ரசிகர்கல் சில மாறுதல்களை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி வருகிறார்கள். சிலர் அவரது முகம் வயதாகிவிட்டதை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். மறுபக்கம் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் இதனை மறுத்துள்ளார்கள்.