Attakathi Dinesh : முதல் பட இயக்குநருடன் மீண்டும் இணைய போகும் அட்டக்கத்தி தினேஷ்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக முதல் முறையாக திரையில் வந்தார் தினேஷ் .
இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்திற்கு பின்னர் அவர் பெயரே அட்டக்கத்தி தினேஷ் என்ற அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், விசாரணை, இரண்டாம் போரின் கடைசி குண்டு என்று அடுத்து மாறுபட்ட கதாபத்திரத்தில் நடித்தார். இந்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, ஜே பேபி, தேரும் போரும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடியவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இவர்களின் காம்போவில் படம் வருவதால் இதுவும் அட்டக்கத்தி போல் ஜாலியான படமாக இருக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பரிமாறி வருகின்றனர்.