உயிர் - உலகத்துடன் ஜாலி ட்ரிப் போன நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் இருக்கும் காதல் ஜோடிகளில் மிக முக்கியமான ஜோடியாக இருப்பது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். நானும் ரௌடி தான் படம் மூலமாக காதலிக்க ஆரம்பித்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். வரும் 9ஆம் தேதி தங்களது 4ஆவது ஆண்டை கொண்டாட இருக்கின்றனர்.
இவர்களுக்கு உலக் மற்றும் உயிர் என்று இரட்டை ஆண் குழந்தைகள். இருவரும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தங்களது ஓய்வு நேரத்தை மகன்களுடன் செலவிட்டு வருகின்றனர். அப்படித்தான் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகிவிட்டது.
இதே போன்று நயன்தாராவும் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த நிலையில் இப்போது சிறிது ஓய்வில் இருக்கிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்வில் இருக்கும் நிலையில் குடும்பத்தோடு நெதர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு ஆம்ஸ்டர்டாம் சென்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது வெயிலை கூட பொருட்படுத்தாமல் சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர்.
முதல் புகைப்படத்தில், அவர்கள் ஒன்றாக நடந்து, சிரித்து பேசி, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே போன்று 2ஆவது போட்டோவில், விளையாட்டுத்தனமான டைட்டானிக் போஸ் கொடுக்கிறார்கள். இதில் நயன் தாரா பறப்பது போன்று ஆக்ஷன் காட்டுகிறார்.
அடுத்தடுத்த புகைப்படத்தில் உயிர் மற்றும் உலக் ஆகியோர் நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் கைகளை பிடித்துக் கொண்டு புல்வெளியில் நடந்து செல்வது போல் உள்ளது.
பல மாதமாக நயன் - விக்கி ஏன் இணைந்து புகைப்படம் வெளியிடுவது இல்லை. அவர்களுக்குள் பிரச்சனையா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில்... அதற்க்கு பதில் கொடுக்கும் விதமாகவே இந்த புகைப்படங்கள் உள்ளன. இந்தப் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.