Vijay sethupathy : மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் 51 ஆவது திரைப்படம்!
விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ஆறுமுககுமார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது ஆறுமுககுமாருடன் இரண்டாம் முறையாக இணைகிறார், விஜய் சேதுபதி.
செவன் சி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் உள்ள கோவிலில் இன்று பூஜையுடன் துவங்கியது.
விஜய் சேதுபதியின் 51 ஆவது படமான இப்படத்தில், கன்னட நடிகையான ருக்மணி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
புரொடக்ஷன் நம்பர் 5 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை புகைப்படங்களை இயக்குநர் ஆறுமுககுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கெளீர்’ திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -