Vijay Makkal Iyakkam : தமிழ்நாட்டின் அரியணையில் ஏற நினைக்கிறாரா நடிகர் விஜய் ?
ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் அரசியல் அடியையும் எடுத்து வைத்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக உலக பட்டினி தினத்தன்று நடிகர் விஜயின் அறிவுறுத்தலின் படி 234 தொகுதிகளிலும் இலவசமாக வழங்கப்படட்து.
தற்போது தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. ஏனவே அன்றைய தினம் ’இரவு நேர பாடசாலை’ தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தப்பட்சம் 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் போன்ற திட்டங்களை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில், ‘தான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்’ என்று விஜய் சொன்னதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.