Thani Oruvan Upadate : 8 ஆண்டுகளை நிறைவு செய்த தனி ஒருவன்..இன்று மாலை வெளியாகும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு!
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில், 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’
இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எளிதாக புரிந்துகொள்வதற்காக தனி ஒருவன் படத்தின் கதையை நன்மை தீமை இரண்டுக்கும் இடையிலான மோதல் என்று வைத்துக் கொள்வோம். மித்ரன் (ஜெயம் ரவி ) நன்மை என்றால் சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி) தீமை.
தனக்கு சரி என்று படுவதை எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்கிறான் சித்தார்த். உண்மை தான் இறுதியில் ஜெயிக்கும் என்று சித்தார்தின் வேலைகளை தடுக்க முயல்கிறான் மித்ரன். இது தான் படத்தின் கதை.
இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தனி ஒருவன் 2ம் பாகத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.