Allu Arjun : ரசிகர்கள் படை சூழ ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மாஸ் எண்டிரி கொடுத்த அல்லு அர்ஜூன்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் புஷ்பா. இப்படம் 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியானது.
இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.
அதைனையடுத்து சமீபத்தில் நடந்த 69வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் அல்லு.
அதைதொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படிப்பிடிப்பில் பிஸியாக நடித்துவருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவர் வருவதற்கு முன்பாக அங்கு குவிந்துள்ளனர். ரசிகர்கள் சூழ ஃபிலிம் சிட்டியின் உள்ளே சென்றுள்ளார். இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.