உக்ரைன் மீதான போரை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப்பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான போர் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. 


மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.மேலும்,  ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறும் வகையில் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. 


முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களைக் கைவிட்டு, நாடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இரு நாட்டுத் தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


மேலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார். 


உக்ரைன் அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் ரஷ்யாவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 






தொடர்ந்து, உக்ரைனில் சுப்ரோசியாவிலுள்ள ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. 


ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தும் வீடியோ : 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண